பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை மஞ்சளாறு அணையில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே சாத்தாகோயில்பட்டியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (15). இவரது ஊரில் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து அவரும், அவரது நண்பர்களும் மஞ்சளாறு அணையில் குளிக்கச் சென்றனர். அப்போது, அணையின் ஆழமான பகுதியில் குளித்த போது அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டாராம். அவரது சடலம் வெள்ளிக்கிழமை மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தேவதானப்பட்டி போலீஸார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை தொடர்ந்து தேடி வருகின்றனர்.