தேனி அருகே பேருந்து மோதி முதியவர் சாவு

தேனி அருகே வியாழக்கிழமை இரவு, பேருந்து மோதி சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.

தேனி அருகே வியாழக்கிழமை இரவு, பேருந்து மோதி சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.
தேனி- கம்பம் சாலை, உப்பார்பட்டி விலக்கு பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அரசு பேருந்து, மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து உப்பார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அன்னபூரணி அளித்த புகாரின் பேரில், உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பாண்டியராஜா (45) என்பவர் மீது, வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com