தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற மெக்கானிக் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இங்குள்ள தாமஸ் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விவேக் (22). இவர் அதே பகுதியில் டூவிலர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கல்லூரிச் சாலையில் தனது நண்பர் தர்மர் மகன் மனோஜூடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றாராம். அப்போது நெடுஞ்சாலையோரத்தில் கிடந்த கல்மீது மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதை அடுத்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் விவேக்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். உத்தமபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.