பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் தர்மர் (38). இவர் தனது மனைவி பாண்டியம்மாள் (30) மற்றும் 2 குழந்தைகளுடன் திங்கள்கிழமை காலை ஆண்டிபட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த திவ்யபாரதி என்பவர் வாகனத்தின் மீது தர்மர் வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தர்மர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். மேலும் பலத்த காயமடைந்த பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள் புவனேஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு மகள், திவ்ய பாரதி லேசான காயமடைந்தனர்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீஸார் திவ்யபாரதி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.