சம்பளப் பாக்கி: கம்பத்தில் துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்தம்

கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து கம்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து கம்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. மொத்தம் 135 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
இதில் ஓய்வு பெற்றோர், நிரந்தர காலிப் பணியிடங்களை  நிரப்ப நிர்வாக அனுமதியில்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் 77 நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
 பற்றாக்குறையான துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்களை தனியார்மயம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு 56 பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 36 பேர்களுக்கு கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லையாம். இதனால் திங்கள்கிழமை வேலைக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகம் முன் ஆண், பெண் துப்புரவுப் பணியாளர்கள் கூடினர். பின்னர் அலுவலக வாசல் முன் அமர்ந்து, சம்பளம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். அலுவலகத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர் சங்கரன் துப்புரவுத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com