தேனி அருகே உரிய கல்வித் தகுதியின்றி அலோபதி மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
வயல்பட்டி, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி மகன் மூர்த்தி (45). இவர், உரிய கல்வித் தகுதியின்றி அலோபதி மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வீரபாண்டியைச் சேர்ந்த பொன்னம்மாள், வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து மூர்த்தியை கைது செய்தனர்.