உத்தமபாளையம் அருகே பைக் மோதி மூதாட்டி சாவு

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி பகுதியிலுள்ள  கோஜேந்திர ஓடையை சேர்ந்த மொக்கராசு  மனைவி ராஜாத்தி (70).  இவர் செவ்வாய்க்கிழமை இரவு  அங்குள்ள

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி பகுதியிலுள்ள  கோஜேந்திர ஓடையை சேர்ந்த மொக்கராசு  மனைவி ராஜாத்தி (70).  இவர் செவ்வாய்க்கிழமை இரவு  அங்குள்ள நெடுஞ்சாலையோரத்தில் நடந்து சென்றுள்ளார்.  அப்போது  அவ்வழியாக  சென்ற மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை  கம்பம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.
உத்தமபாளையம் போலீஸார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அனுமந்தன்பட்டியை  சேர்ந்த பாண்டியன் மகன் சோபன் (21) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com