தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 24) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து ஹதீர்வு காணலாம் என்று ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.