பள்ளி சத்துணவுக் கூடத்தில் திருடியவர் கைது

பள்ளி சத்துணவுக் கூடத்தில் மிக்ஸி,  சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றை திருடியவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி சத்துணவுக் கூடத்தில் மிக்ஸி,  சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றை திருடியவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 போடி புதூர்,  தாலுகா காவல் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடத்தில் சமையல் எரிவாயு உருளை மற்றும் மிக்ஸி ஆகியவை திருடப்பட்டன. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.ஸ்ரீநிவாசன் போடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் போடி போயன்துரை சாலையைச் சேர்ந்த ஹக்கீம் மகன் ரபீக் ராஜா (24) என்பவர் அவற்றை திருடியது தெரிய வந்தது.  இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் திருடப்பட்ட பொருள்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com