போடியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போடி நந்தவனம் பொதுக் கழிப்பிடம் அருகே நின்றிருந்த போடி கொக்கையர் பள்ளி தெருவைச் சேர்ந்த போஸ் மகன் மாவூத்து கருப்பையா (30) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
இதனையடுத்து போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் பா.சேகர் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.