வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை (அக். 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளதாவது: ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே ரெங்கநாதபுரம், தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, காசிபாளையம், நல்லபொம்மன்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூர், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூர், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.