தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டத்துக்குள்பட்ட தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவ

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டத்துக்குள்பட்ட தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கவிதைப் போட்டியில் ராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவர் புவனேசன் முதலிடம் பெற்றார். தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அகிலாவர்ஷினி 2-ஆம் இடமும், பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமலதா 3-ஆம் இடமும் வென்றனர்.
கட்டுரைப் போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீசரண், முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி மாணவர் அர்ஜூன், கூடலூர் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளி மாணவி ஜனனி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வென்றனர்.
பேச்சுப் போட்டியில் ராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவர் சங்கர், தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி புவனேஸ்வரி, சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் விவேக் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வென்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் வென்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 2-ஆம் இடம் வென்றவர்களுக்கு தலா ரூ.7 ஆயிரமும், 3-ஆம் இடம் வென்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் பரிசுத் தொகையாக ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com