தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் புதன்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் பேரூராட்சி பணியாளர்கள் பாஜக கட்சி சுவரொட்டிகளை முன்னறிவிப்புமின்றி கிழித்து அகற்றியதாக புகார் தெரிவித்து மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்திக் தலைமையிலான நிர்வாகிகள் பேரூராட்சி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி பேச்சுவார்த்தை நடத்தினர். சுவரொட்டிகளை அகற்றியவர்கள் மன்னிப்பு கோரியதை அடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.