சதுரங்கப் போட்டி: உத்தமபாளையம் கல்லூரி மாணவர் 2 ஆம் இடம்

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவர், மாவட்ட  அளவிலான  சதுரங்கப்  போட்டியில்  2 ஆம் இடம் வெற்றார்.

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவர், மாவட்ட  அளவிலான  சதுரங்கப்  போட்டியில்  2 ஆம் இடம் வெற்றார்.
 மார்க்கையன்கோட்டையில், பென்னிகுவிக் சதுரங்க கலைக் கழகம் சார்பில்  மாவட்ட அளவிலான  சதுரங்கப்  போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அக். 7, 8) நடைபெற்றது.  இதில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி  மாணவர்கள் பங்கேற்றனர்.
    அதில்,  உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியைச் சேர்ந்த முதுகலை 2 ஆம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர் அப்துல் ஜப்பார் 2 ஆம் இடம் பெற்றார். இவரை கல்லூரி ஆட்சிக்கு குழுத்தலைவர் சேக்முகைதீன் , கல்லூரி  செயலரும்,  தாளாளருமான தர்வேஷ்  முகைதீன், கல்லூரி முதல்வர் முகமது மீரான், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி மற்றும்  பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com