குமுளி மலைப்பாதையில் கேட்பாரற்று நின்ற கார்: போலீஸ் விசாரணை

குமுளி மலைப்பாதையில் கடந்த 5 நாள்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்த காரை வெள்ளிக்கிழமை லோயர்கேம்ப் போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

குமுளி மலைப்பாதையில் கடந்த 5 நாள்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்த காரை வெள்ளிக்கிழமை லோயர்கேம்ப் போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தமிழக- கேரள எல்லையை இணைக்கும் குமுளி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த பாதை தமிழக எல்லை லோயர்கேம்ப்பிலிருந்து கேரள மாநிலம் குமுளி வரை 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. 5 ஆவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை சோதனை சாவடிகளுக்கிடையே ஒரு கார் கடந்த 5 நாள்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுபற்றி லோயர்கேம்ப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.என். 31 ஏ.ஒய். 3705 என்ற பதிவு எண் கொண்ட அந்த காரை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com