தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வெள்ளிக்கிழமை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தேனி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எம்.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் மற்றும் நீதித் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.