போடியில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போடியில், வெள்ளிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போடியில், வெள்ளிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 7 ஆவது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் டி.தங்கவேல் தலைமை வகித்தார்.
தாலுகா தலைவர் கே.சுருளிவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் போடி வட்டத்தில் உள்ள 15 கிராமங்களை சேர்ந்த வருவாய் கிராம ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்த வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர், போடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com