மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் சாவு

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உயிரிழந்தார்.
அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் பெரியவேலுச்சாமி மகன் அய்யப்பன் (40). இவர் கண்டமனூர் மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இவர் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் மின் கம்பத்தில் ஏறி மின்பழுதை நீக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். கண்டமனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com