உத்தமபாளையம் அடுத்த க.புதுப்பட்டியில் புதன்கிழமை அனுமதியின்றி மதுப்பாட்டில் விற்றவரை கைது செய்து அவரிடமிருந்து 60 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் க.புதுப்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே இயங்கி வந்த மதுக்கடை மூடப்பட்டது. இதனை அடுத்து சிலர், அனுமதியின்றிஅப்பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பதாக உத்தமபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை அப்பகுதியில் ரோந்து சேன்ற போது, க.புதுப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த தர்மர் (55) என்பவரிடமிருந்து 60 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து , அவரை கைது செய்தனர்.