பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முபாரக் (40). பெங்களூருவில் வசித்து வரும் இவர், பொம்மிநாயக்கன்பட்டிக்கு பக்ரீத் கொண்டாடுவதற்காக வந்துள்ளார்.
பின்னர் வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் உள்ள தம்பியிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். இந்நிலையில் செப். 19 ஆம் தேதி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 42 பவுன் நகைகள் மற்றும் இரு சக்கரவாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனராம். ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.