ஒட்டன்சத்திரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டப்படும் இடத்தை ஆட்சியர் ஆய்வு

ஒட்டன்சத்திரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டப்படும் இடத்தை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு மேற்கொண்டார்.

ஒட்டன்சத்திரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டப்படும் இடத்தை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு மேற்கொண்டார்.
ஒட்டன்சத்திரத்தில் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் அரசுக்கு கூடுதலாக செலவு ஏற்படுகிறது. இதையடுத்து திண்டுக்கல்- பழனி சாலை லெக்கையன்கோட்டை ஊராட்சி சேமிப்பு கிட்டங்கி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தையும், அதன் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான இடத்தையும் நீதிமன்றங்கள் கட்ட மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பொ.மாரிமுத்து,துணை வட்டாட்சியர் எம்.முத்துச்சாமி, வட்ட துணை ஆய்வாளர் சாய்ராம்ஷா,வருவாய் அலுவலர் முத்துக்குட்டி ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com