கூடலூரில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது

தேனி மாவட்டம் கூடலூரில் வெள்ளிக்கிழமை 5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் வெள்ளிக்கிழமை 5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கூடலூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல் ஆய்வாளர் ஷாஜகான் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடலூர்- கம்பம் பிரதான சாலையில் நடந்து சென்ற ஒரு இளைஞரை பிடித்து, விசாரணை செய்தனர்.
அப்போது அவர் கூடலூர் 3 ஆவது வார்டு, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நேரு மகன் சசி (22) என்பதும், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் கஞ்சாவை கைப்பற்றி, சசியை கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com