தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப். 25) காலை 10 மணிக்கு முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், முன்னாள் படை வீரர் மற்றும் வாரிசுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம். மனு அளிக்க வருவோர் தங்களது படை விலகுச் சான்று மற்றும் படைப் பணி ஆவணங்களுடன், 2 பிரதிகளாக கோரிக்கை மனுவை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்து.