சின்னமனூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபாதை அமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம் சின்னமனூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 சின்னமனூரின் மத்தியில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேனி உள்பட தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் முக்கிய போக்குவரத்து வழித்தடம் இது என்பதால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும்.
 இதனிடையே, சின்னமனூர் நகரில் சாலையோரத்தில் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் இரு வழிச்சாலையான இப்பகுதி ஒருவழிப்பாதை அளவுக்கு அகலம் குறைந்து விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இதனை அடுத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அளித்த புகாரின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
நடைபாதை அமைக்க வலியுறுத்தல்: இதனிடையே சின்னமனூர் வர்த்தகம் நிறைந்த பகுதி என்பதால் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வாங்க அதிகளவில் வருகிறார்கள். மேலும் வாரச்சந்தை கூடுவதால் சின்னமனூரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை அமைக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகனங்களை சாலையோரத்தில் அறிவிக்கப்பட்ட இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 இது குறித்து அவர்கள் கூறியதாவது: நகராட்சி சார்பில் பேருந்து நிலையம் முதல் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் வரையில் சாலையின் இருபுறமும் பாதசாரிகளுக்கு நடைபாதை அமைக்க வேண்டும். இதன் மூலம் நெடுஞ்சாலையை  ஆக்கிரமிப்பு செய்து கடைகள்அமைப்பதை தடுக்கலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com