தேனியில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் திங்கள்கிழமை, காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலர் முருகன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் சங்கிலி முன்னிலை வகித்தார்.
இதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், மத்திய, மாநில அரசுகளை விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.