தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு சராசரி 11.45 மி.மீ., மழை பெய்துள்ளது.
போடியில் அதிக அளவில் 99.20 மி.மீ., மழை பெய்துள்ளது. பெரியகுளத்தில் 13 மி.மீ., சோத்துப்பாறையில் 3 மி.மீ., வைகை அணை நீர்பிடிப்பில் 9.40 மி.மீ., மழை பெய்துள்ளது. தேக்கடியில் 9.20 மி.மீ., முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் 3.60 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
அணைகளின் நீர்மட்டம்: வைகை அணை நீர்மட்டம் செவ்வாய்கிழமை 34.38 அடியாக இருந்தது. அணையில் தண்ணீர் இருப்பு 573 மில்லியன் கன அடி. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 434 கன அடி. அணையில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 48 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 113.90 அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.