தேனியில் கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து தேனியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து தேனியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வி.பெத்தாட்சி ஆஸாத் முன்னிலை வகித்தார். இதில், மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வு, பொதுமக்களை பாதிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், இந்திய அரசியல் சாசனம் மற்றும் மதச் சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com