கம்பம் தெற்கு காவல் நிலையத்துக்கு புதிய ஆய்வாளர்

கம்பம் தெற்கு காவல் நிலையத்துக்கு 8 மாதங்களுக்குப் பிறகு புதிய காவல் ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

கம்பம் தெற்கு காவல் நிலையத்துக்கு 8 மாதங்களுக்குப் பிறகு புதிய காவல் ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
தேனி மாவட்டம், கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த கர்ணன் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார். பின்னர், சென்னைக்கு விருப்ப மாறுதல் பெற்றுச் சென்றார். 
இதனால், கடந்த 8 மாதங்களாக காவல் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்தது. எனவே, வடக்குக் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு அதிகாரியாகச் செயல்பட்டார். இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தெற்கு காவல் எல்லை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை தெற்கு காவல் நிலையத்துக்கு புதிய ஆய்வாளராக சுப்புலட்சுமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர். இவரை, காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வரவேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com