மக்கள் தொடர்பு முகாமில் 45 பேருக்கு நலத் திட்ட உதவி

தேனி அருகே பூமலைக்குண்டு கிராமத்தில் புதன்கிழமை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

தேனி அருகே பூமலைக்குண்டு கிராமத்தில் புதன்கிழமை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமை வகித்தார். பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். 
இம்முகாமில் வருவாய்த் துறை,  மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தோட்டக் கலைத் துறை, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை ஆகியவற்றின் சார்பில் 45 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13.55 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ரசிகலா, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com