வருசநாடு அருகே கார்கள் மோதல்: ஒருவர் சாவு

தேனி மாவட்டம் வருசநாடு அருகே புதன்கிழமை கார்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே புதன்கிழமை கார்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
 வருசநாட்டைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனது உறவினர் ஜெயச்சந்திரனுடன் குலதெய்வம் கோயிலுக்கு புதன்கிழமை காரில் சென்றார். அப்போது முத்துக்குமரன் (40) என்பவர்  ஓட்டி வந்த காரும், கனகராஜ் ஓட்டு வந்த காரும் மோதிக் கொண்டதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.
 இவர்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமரன் உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com