ஆண்டிபட்டி அருகே இந்திரா நகரில் இளையோர் பாராளுமன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். பார்த்திபன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் எ. சுந்தரமகாலிங்கம் கருத்துரை வழங்கினார்.
இதில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தி. திருநாவுக்கரசு, தோல் நோய் சிறப்பு மருத்துவர் உமாகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், தொழு நோய் மற்றும் தோல் நோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேரு யுவகேந்திரா இளையோர் தொண்டர் பி. பிரதீப் நன்றி கூறினார்.