உத்தமபாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள புறவழிச் சாலை பேருந்து நிறுத்தம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் யாசர் அராபத் தலைமை வகித்தார். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.