போடியில் குழந்தைகள் பிரச்னை குறித்த கருத்தரங்கம், ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி சைல்டு-லைன் 1098 அமைப்பு மற்றும் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து, கல்லூரி மாணவ- மாணவியருக்கான சைல்டு-லைன் விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கை நடத்தின. கல்லூரியின் புதிய கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர். பாண்டி தலைமை வகித்தார். தேனி சைல்டு-லைன் அமைப்பின் இயக்குநர் எஸ். முகமது சேக் இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். சைல்டு-லைன் களப்பணிகள் குறித்து அவ்வமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சு விளக்கினார். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உதவிப் பேராசிரியர் சுபலட்சுமி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஹேமா நன்றி கூறினார்.