வீரபாண்டியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், கம்பம் போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு-ஆய்வாளர் புதன்கிழமை தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
கம்பம் போக்குவரத்துக் காவல் சிறப்பு சார்பு-ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் பாவா சிக்கந்தர். வீரபாண்டி காவலர் குடியிருப்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, இவர் மீது ஜனவரி 7-ஆம் தேதி வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாவா சிக்கந்தரை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.