தேனியில் காவல் துறை, பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் ஓட்டப் போட்டி

தேனியில் மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை காவல் துறை- பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

தேனியில் மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை காவல் துறை- பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் போட்டிகளை தொடக்கி வைத்தார். ஆண் மற்றும் பெண்களுக்கு தனித் தனிப் பிரிவாக நடைபெற்ற போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மொத்தம் 370 பேர் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் சீலையம்பட்டியைச் சேர்ந்த வி.ஆர்.செல்லப்பாண்டி முதலிடம் வென்றார். தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பூதிப்புரத்தைச் சேர்ந்த நாகராஜ் 2-ஆம் இடமும், தேனியைச் சேர்ந்த எம்.பாண்டியராஜ் 3-ஆம் இடமும் பெற்றனர். பெண்கள் பிரிவில் பெரியகுளத்தைச் சேர்ந்த சிந்து முதலிடமும், தேனி ஆயுதப் படை பிரிவு காவலர்கள் சீனியம்மாள், சந்திரா ஆகியோர் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களை வென்றனர். மதுரையைச் சேர்ந்த 78 வயது முதியவர் கே.ராமச்சந்திரன் போட்டியில் கலந்து கொண்டு, போட்டிக்கான 8 கி.மீ. தூரத்தை முழுமையாக ஓடிக் கடந்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் கேடயம், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com