பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள்

பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், திருக்குறள் போட்டிகள் ஜனவரி 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், திருக்குறள் போட்டிகள் ஜனவரி 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
      பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில், பெரியகுளம் நகர் பகுதியைச் சேர்ந்த 3, 4, 5 வகுப்புகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொள்ளலாம். பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள், திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும், பெரியகுளம் நகர் மற்றும் ஊராட்சி ஒன்றிய எல்லைகளுக்குள்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ளலாம்.
      கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்போர் தாங்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தலைமையாசிரியர்களின் கையொப்பமிட்ட சான்று பெறவேண்டும்.  
     போட்டியில் பங்கேற்போர் தங்களது பெயர்களை, புலவர் மு. ராசரத்தினம், சர்வோதய சங்க கதர் கடை, மூன்றாந்தல், பெரியகுளம் என்ற முகவரியில் ஜனவரி 17 ஆம் தேதி (புதன்கிழமைக்குள்) பதிவு செய்துகொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com