ஆண்டிபட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த அய்யர்த் தேவர் மகள் பிரியதர்ஷினி (18). இவர், தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை வீட்டில் சமையல் செய்ய மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தபோது, அடுப்பு வெடித்து தீப்பற்றியதில் பிரியதர்ஷின் பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்தார்.