தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை கஞ்சா விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கம்பம், கோம்பைச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் தவசி மகன் அர்ஜூன் (36). இவர், கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.