பெரியகுளத்தில் அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனை வரவேற்று அனுமதியின்றி பதாகை வைத்ததாக அக்கட்சியைச் சேர்ந்த 12 பேர் மீது பெரியகுளம் மற்றும் தென்கரை காவல்நிலையங்களில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமமுக பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு வந்திருந்த டிடிவி தினகரனை வரவேற்று பல்வேறு இடங்களில் அமமுகவினர் பதாகை வைத்திருந்தனர். இதனையடுத்து அனுமதியின்றி பதாகை வைத்ததாகக் கூறி அக்கட்சி நிர்வாகிகள் குபேந்திரன், அபுதாஹீர், சதீஸ்குமார், மணிகண்டன், ராஜாமுகமது, சையது அலி, சபீர்அலி, ராமச்சந்திரன் உள்பட 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.