கோம்பை பேரூராட்சி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வருவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோம்பை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர். அதில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற பண்ணைப்புரம் கள்ளர் பள்ளி தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சிவக்குமாரிடமிருந்து (28) 60 மதுபாட்டில்களையும், கோம்பையைச் சேர்ந்த சுருளி மகன் முருகேசனிடம் 6 மதுபாட்டில்களையும் மற்றும் சீனி (58) என்பவரிடமிருந்து 3 மதுபாட்டில்கள் என மொத்தம் 69 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.