காவலருக்கு கொலை மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநர் கைது

பெரியகுளத்தில் காவலருக்கு கொலைமிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பெரியகுளத்தில் காவலருக்கு கொலைமிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பெரியகுளம், தென்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ராஜா. இவர் வெள்ளிக்கிழமை கைலாசபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் (24), சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அவரிடம் காவலர் ராஜா, ஆட்டோவை ஓரமாக நிறுத்த அறிவுறுத்தியுள்ளார். அப்போது, நாராயணன், காவலர் மீது ஆட்டோவை விட்டு மோதி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து நாராயணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com