தேனியில் நாளை முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மே 28) காலை 10 மணிக்கு முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெறும்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மே 28) காலை 10 மணிக்கு முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து மனு அளித்து தீர்வு காணலாம். குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வருவோர், தங்களது மனுவை இரண்டு பிரதிகளாக தயார் செய்து, அசல் படை விலகுச் சான்று மற்றும் படைப் பணி ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்குள் முன்னாள் படைவீரர் நலத்துறை அலுவலர்களிடம் மனுவை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இத்தகவல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com