நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஒட்டன்சத்திரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஒட்டன்சத்திரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்குள்ள தாராபுரம் பிரிவு சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை தொகுதி தலைவர் மாரி.அன்பழகன் தலைமை வகித்தார். செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட அமைப்பாளர் சைமன், ஆத்தூர் சட்டப் பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளர் தெண்டபாணி, நிலக்கோட்டை சங்கிலிப்பாண்டி, பழனி நகர செயலர் சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com