சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதையடுத்து பெரியகுளத்தில் வெள்ளிக்கிழமை சர்கார் திரைப்படம் 2 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் உள்ளதாகக் கூறி அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பெரியகுளத்தில் இத்திரைப்படம் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்த திரையரங்குகளை அதிமுகவினர் முற்றுகையிட்டு இத்திரைப்படத்தின் பதாகைகளை வியாழக்கிழமை கிழித்து எறிந்தனர்.
இதனால் இத்திரையரங்குகளில் இப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த 2 திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சர்கார் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டன.