பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளித் தலைமையாசிரியர் சண்முகக்கனி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ரத்தினமாலா, மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராம், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக்கு டி.கள்ளிப்பட்டி மற்றும் ஜல்லிபட்டி செல்லும் சாலையில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பள்ளிக்கு கட்டடம் கட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் வைகுண்டம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.