தேனியில் அக்.29-இல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசு ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசு ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெறும் இக்குறைதீர் கூட்டத்தில், அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். எனவே, ஓய்வூதியதர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com