சின்னமனூர் ஐயப்ப சேவா சங்கம் , முருக பக்தர்கள் சபை உள்பட பல இந்து அமைப்புகள், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை ஊர்வலம் சென்றனர்.
சின்னமனூர் பிரதான சாலையில் தொடங்கிய ஊர்வலம், அரசு மருத்துவமனை, சீப்பாலக்கோட்டை சாலை, முத்தாலம்மன் கோயில் வழியாக சென்று, தேனி நெடுஞ்சாலையிலுள்ள மார்க்கையன்கோட்டை விலக்கு ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.