நீதித்துறை ஊழியர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

தேனியில் தமிழ்நாடு நீதித் துறை ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனியில் தமிழ்நாடு நீதித் துறை ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் செந்தில்குமார், பொதுச் செயலர் அருணாச்சலம், மாவட்டச் செயலர் பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நீதித் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  
இதில், முன்னாள் மாநிலத் தலைவர் கருணாகரன், முன்னாள் பொருளாளர் எம்.கே.பாஸ்கரன், தலைமை நிர்வாக அலுவலர் அசோக்குமார், மாநில பொருளாளர் கண்ணபிரான், துணைத் தலைவர் ஜி.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com