போடியில் சூறைக்காற்றுடன் மழை

போடியில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

போடியில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மீனாட்சிபுரத்தில் மின் கம்பம் சாய்ந்ததால் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
போடியில் சனிக்கிழமை காலை முதலே வெயில் அடித்து வந்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்தது. மேலும், பலத்த சூறைக்காற்று வீசியது. பின்னர், இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.
பலத்த சூறைக்காற்றால் போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் மீனாட்சியம்மன் கண்மாய் கரை அருகே இருந்த மின் கம்பம் சாய்ந்து கண்மாய்க்குள் விழுந்தது. இதனால் இக்கிராமத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. அதையடுத்து, அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கினர். ஆனாலும் கண்மாய் கரை அருகே இருந்த பகுதிகளில் மின் தடை நீடித்தது. போடி பகுதியிலும் மழை பெய்த நேரத்தில் விட்டு விட்டு மின் தடை ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com