டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாகச் சென்று பணியாளர்கள் ஆய்வு

தேனி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்

தேனி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் வீடுகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, திரையரங்கு, தொழில் கூடம் ஆகிய இடங்களில் சுற்றுச் சூழலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குடியிருப்புகளுக்கு அருகே மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக அனைத்து பகுதிகளும் களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். களப் பணியாளர்கள் வழங்கும் ஆலோசனையை ஏற்று கொசு உற்பத்தியை தடுப்பதற்கு பொதுமக்கள் 
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு சாப்பிடுவதற்கு முன்பும், மலம் கழித்த பின்பும் கைகளை சுத்தமாக கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com